என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண நிச்சயதார்த்த விழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழப்பு
Byமாலை மலர்29 Aug 2020 3:49 AM GMT (Updated: 29 Aug 2020 4:23 AM GMT)
திருமண நிச்சயதார்த்த விழாவில் பட்டாசு வெடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பனந்தாள்:
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே முள்ளுகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவருக்கும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதனால் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு மாரியப்பனின் உறவினர்கள் சீர்வரிசை செய்யும் விழா முள்ளுக்குடியில் நடந்தது. அப்போது அவரது உறவினர்கள் சீர்வரிசை விழாவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது வெடித்த வெடியில் அருகில் நின்று கொண்டிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தை சேர்ந்த செந்தில் மகன் சக்தி(வயது 6), முள்ளுக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன்(வயது 6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே முள்ளுகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவருக்கும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதனால் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு மாரியப்பனின் உறவினர்கள் சீர்வரிசை செய்யும் விழா முள்ளுக்குடியில் நடந்தது. அப்போது அவரது உறவினர்கள் சீர்வரிசை விழாவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது வெடித்த வெடியில் அருகில் நின்று கொண்டிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தை சேர்ந்த செந்தில் மகன் சக்தி(வயது 6), முள்ளுக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன்(வயது 6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X