search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர் எம்.பி.
    X
    திருநாவுக்கரசர் எம்.பி.

    இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதல்-அமைச்சருக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை

    இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருநாவுக்கரசர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி நாடாளுமன்ற தொகுதி திருநாவுக்கரசர் எம்.பி. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இ-பாஸ் பெறவேண்டும் என்ற விதிமுறை மத்திய அரசால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தொடரும் இந்த திட்டத்தினால் மக்கள் பல இடையூறுகளை அனுபவித்து வருகிறார்கள். ஓட்டல்கள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் யாரும் தேவை இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லப்போவது இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்வதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×