என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்வு
Byமாலை மலர்15 Aug 2020 7:48 AM GMT (Updated: 15 Aug 2020 7:48 AM GMT)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியில் இருந்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.59 அடியாக உயர்ந்தது. இதனிடையே நேற்று இரவு 8 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து நீர்மட்டம் 98.91 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும், நீர் இருப்பு 63.55 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியில் இருந்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.59 அடியாக உயர்ந்தது. இதனிடையே நேற்று இரவு 8 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து நீர்மட்டம் 98.91 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும், நீர் இருப்பு 63.55 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X