என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறையில் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகையை வீடு புகுந்து கொளையடித்த கும்பல்
Byமாலை மலர்14 Aug 2020 1:26 PM GMT (Updated: 14 Aug 2020 1:26 PM GMT)
மணப்பாறையில் பட்டப்பகலில் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது மனைவி வைரமணி ராஜவீதியில் தையலகம் வைத்து நடத்தி வருகிறார். இம்மாத இறுதியில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் அதற்கான 18 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் பொன்னம்பலம் மற்றும் குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின், வீட்டில் இருந்த பீரோவை திறந்தபோது அதில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், இனி தனது மகளுக்கு எப்படி திருமணம் நடக்கப்போகிறது என்ற கவலையிலும் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது மனைவி வைரமணி ராஜவீதியில் தையலகம் வைத்து நடத்தி வருகிறார். இம்மாத இறுதியில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் அதற்கான 18 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் பொன்னம்பலம் மற்றும் குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின், வீட்டில் இருந்த பீரோவை திறந்தபோது அதில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், இனி தனது மகளுக்கு எப்படி திருமணம் நடக்கப்போகிறது என்ற கவலையிலும் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X