என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்துகளில் பெண்களுக்கு சமஉரிமை - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு
Byமாலை மலர்11 Aug 2020 11:09 AM GMT (Updated: 11 Aug 2020 11:21 AM GMT)
சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சமஉரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில்,
பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று 2005, இந்து வாரிசு உரிமை சட்டம் வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும் என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சமஉரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவதாகவும், சமூக நீதியை காப்பாற்றும் விதமாக அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X