search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

    சோழவரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×