என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்வு
Byமாலை மலர்10 Aug 2020 3:19 AM GMT (Updated: 10 Aug 2020 3:19 AM GMT)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்து 86.91 அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்:
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக-கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது.
நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகமானது. நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 75.85 அடியாக இருந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்து 86.91 அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாகவும், நீர்இருப்பு 49.1 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக-கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது.
நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகமானது. நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 75.85 அடியாக இருந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்து 86.91 அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாகவும், நீர்இருப்பு 49.1 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X