search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 49,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு வரக்கூடிய உபரிநீரின் அளவு அதிகரித்து வருகிறது.  

    தற்போது கர்நாடக அணைகளில் இருந்து ஒரு சுமார் 1,23,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 42,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று 7,000 கனஅடி நீர் அதிகரித்து, 49,000 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

    நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் ஐந்தருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் செல்வதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிரித்துள்ளது.
    Next Story
    ×