என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Byமாலை மலர்7 Aug 2020 11:57 AM GMT (Updated: 7 Aug 2020 11:57 AM GMT)
புழல் அருகே டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருளை திருடி அதை கலப்படம் செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
புழல்:
புழல் பகுதியில் தனியார் லாரி குடோனில் பெட்ரோல், டீசல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எண்ணெய் நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடி கலப்படம் செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 12 டேங்கர் லாரிகள், 500 லிட்டர் டீசல், 700 லிட்டர் பெட்ரோல், கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரி ஓட்டுனர்கள் உதவியுடன் குடோனிற்கு லாரிகளை கொண்டு வந்து அதன் சீலை உடைக்காமல் பெட்ரோல், டீசல் திருட்டு நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் பகுதியில் தனியார் லாரி குடோனில் பெட்ரோல், டீசல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எண்ணெய் நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடி கலப்படம் செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 12 டேங்கர் லாரிகள், 500 லிட்டர் டீசல், 700 லிட்டர் பெட்ரோல், கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரி ஓட்டுனர்கள் உதவியுடன் குடோனிற்கு லாரிகளை கொண்டு வந்து அதன் சீலை உடைக்காமல் பெட்ரோல், டீசல் திருட்டு நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X