search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விருதுநகரில் இன்று மேலும் 303 பேருக்கு கொரோனா உறுதி

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 303 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,572 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,572 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகரில் கொரோனாவிலிருந்து 6,783 பேர் குணமடைந்த நிலையில் 2,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×