search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணேஷ்குமார் பாஸ்கர்
    X
    கணேஷ்குமார் பாஸ்கர்

    சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்

    சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து நாகர்கோவில் என்ஜினீயர் சாதனை படைத்தார். அவர் இந்திய வெளியுறவு பணியில் ஈடுபட விரும்புவதாக கூறினார்.
    நாகர்கோவில்:

    சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் (வயது 27) என்பவர் இந்திய அளவில் 7-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    என்ஜினீயரான இவருடைய தந்தை பாஸ்கர் மத்திய அரசு ஊழியர் ஆவார். நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய சொந்த ஊர் மதுரை.

    இதுகுறித்து கணேஷ்குமார் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்வில் நான் அகில இந்திய அளவில் 100 இடங்களுக்குள் வருவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 7-வது இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அளவில் நான் பெற்றுள்ள ரேங்க் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    யு.பி.எஸ்.சி. தேர்வை கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையாக எழுதினேன். அப்போது நான் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி கொண்டே தேர்வை எழுதினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த தேர்வை எழுதினேன். தேர்வுக்கு 3 மாதங்களுக்கு முன்பு எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தேர்வுக்கு தயாரானேன். அதில் 7-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். நான் இந்திய வெளியுறவுப்பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளேன்.

    இவ்வாறு கணேஷ்குமார் பாஸ்கர் கூறினார். 
    Next Story
    ×