என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்
Byமாலை மலர்28 July 2020 5:36 PM GMT (Updated: 28 July 2020 5:36 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது.இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோ எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 167
செங்கல்பட்டு - 3,680
சென்னை - 12,852
கோவை - 1,581
கடலூர் - 1,002
தர்மபுரி - 310
திண்டுக்கல் - 786
ஈரோடு - 192
கள்ளக்குறிச்சி - 1,186
காஞ்சிபுரம் - 3,064
கன்னியாகுமரி - 2,076
கரூர் - 156
கிருஷ்ணகிரி - 436
மதுரை - 2,288
நாகை - 263
நாமக்கல் - 277
நீலகிரி - 160
பெரம்பலூர் - 130
புதுக்கோட்டை - 756
ராமநாதபுரம் - 781
ராணிப்பேட்டை - 1,658
சேலம் - 1,034
சிவகங்கை - 487
தென்காசி - 892
தஞ்சாவூர் - 1,000
தேனி - 2,031
திருப்பத்தூர் - 420
திருவள்ளூர் - 4,173
திருவண்ணாமலை - 1,682
திருவாரூர் - 617
தூத்துக்குடி - 2,495
திருநெல்வேலி - 1,738
திருப்பூர் - 306
திருச்சி - 1,398
வேலூர் - 1,291
விழுப்புரம் - 972
விருதுநகர் - 2,484
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 142
உள்நாடு - 108
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 57,073
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X