என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் வழக்கு- கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை
Byமாலை மலர்20 July 2020 11:26 AM GMT (Updated: 20 July 2020 11:26 AM GMT)
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
சாத்தான்குளம்:
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுத்தாக்கல் செய்து இருந்தது.
மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சிபிஐ, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில் சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனுதாக்கல் செய்த நிலையில் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ், பாலசுப்பிரமணியனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட முதலில் கைதான 5 போலீசாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுத்தாக்கல் செய்து இருந்தது.
மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சிபிஐ, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில் சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனுதாக்கல் செய்த நிலையில் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ், பாலசுப்பிரமணியனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X