search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுரை அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

    மதுரை அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள், பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மூதாட்டியை மிளகாய்பொடி தூவி கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×