search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    விருதுநகரில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,631ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,427 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும்  204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,631ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சிவகாசியில் மட்டும் 77 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 983 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×