search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா (வயது 65). இவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆம்பூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதனால் அவர்களுடைய வீடு பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து அவர்கள் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.28 லட்சம் மதிப்பிலான சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×