search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது

    நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,026 ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம்

    உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,026 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.
    Next Story
    ×