search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

    திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது.
    திருவாரூர்:

    தமிழகத்தில் நேற்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,47,126 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ல் இருந்து 92,567 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது.

    திருவாரூரில் சித்த மருத்துவர், 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    Next Story
    ×