search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுரையில் 464 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்டவாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 328 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 270 பேர். 

    விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 17 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 5 பேர் ஆவர்.

    மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 36 பேர் ஆகும்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 92 ஆயிரத்து 567 பேர் குணமடைந்துள்ளனர்.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 0
    செங்கல்பட்டு - 219
    சென்னை - 1,140
    கோவை - 27
    கடலூர் - 26
    தர்மபுரி - 20
    திண்டுக்கல் - 1
    ஈரோடு - 34
    கள்ளக்குறிச்சி - 56
    காஞ்சிபுரம் - 352
    கன்னியாகுமரி - 185
    கரூர் - 2
    கிருஷ்ணகிரி - 8
    மதுரை - 464
    நாகை - 27
    நாமக்கல் - 15
    நீலகிரி - 40
    பெரம்பலூர் - 2
    புதுக்கோட்டை - 58
    ராமநாதபுரம் - 43
    ராணிப்பேட்டை - 126
    சேலம் - 101
    சிவகங்கை - 29
    தென்காசி - 39
    தஞ்சாவூர் - 22
    தேனி - 134
    திருப்பத்தூர் - 16
    திருவள்ளூர் - 337
    திருவண்ணாமலை - 83
    திருவாரூர் - 59
    தூத்துக்குடி - 122
    திருநெல்வேலி - 118
    திருப்பூர் - 12
    திருச்சி - 92
    வேலூர் - 129
    விழுப்புரம் - 143
    விருதுநகர் - 25
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 17
    உள்நாடு - 5

    மொத்தம் - 4,328
    Next Story
    ×