search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 1,168 பேர், மதுரையில் 319 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்டவாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 244 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 210 பேர். 

    விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 13 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 1 பேர் ஆவர்.

    மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 20 பேர் ஆகும்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர்.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,966 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உள்மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 4
    செங்கல்பட்டு - 245
    சென்னை - 1,168
    கோவை - 117
    கடலூர் - 16
    தர்மபுரி - 13
    திண்டுக்கல் - 31
    ஈரோடு - 20
    கள்ளக்குறிச்சி - 65
    காஞ்சிபுரம் - 385
    கன்னியாகுமரி - 104
    கரூர் - 5
    கிருஷ்ணகிரி - 7
    மதுரை - 319
    நாகை - 6
    நாமக்கல் - 12
    நீலகிரி - 5
    பெரம்பலூர் - 1
    புதுக்கோட்டை - 45
    ராமநாதபுரம் - 73
    ராணிப்பேட்டை - 46
    சேலம் - 98
    சிவகங்கை - 74
    தென்காசி - 17
    தஞ்சாவூர் - 36
    தேனி - 115
    திருப்பத்தூர் - 25
    திருவள்ளூர் - 232
    திருவண்ணாமலை - 149
    திருவாரூர் - 11
    தூத்துக்குடி - 136
    திருநெல்வேலி - 123
    திருப்பூர் - 3
    திருச்சி - 103
    வேலூர் - 151
    விழுப்புரம் - 4
    விருதுநகர் - 246

    மொத்தம் - 4,210

    விமான நிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 13
    உள்நாடு - 1

    மொத்தம் - 14

    வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக சொந்த மாவட்டம் வந்தவர்கள்:-

    தர்மபுரி வந்தவர்கள் - 4 பேர்
    கள்ளக்குறிச்சி வந்தவர்கள் - 2 பேர்
    ராமநாதபுரம் வந்தவர்கள் - 2 பேர்
    சிவகங்கை வந்தவர்கள் - 1 நபர்
    திருப்பத்தூர் வந்தவர்கள் - 1 நபர்
    திருவண்ணாமலை வந்தவர்கள் - 2 பேர்
    திருநெல்வேலி வந்தவர்கள் - 8 பேர் 

    மொத்தம் - 20 

    இந்த விவரங்களில் அடிப்படையில் (4,210+14+20) இன்று தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 244 ஆக உள்ளது.




    Next Story
    ×