என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும்- துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
Byமாலை மலர்12 July 2020 8:37 AM GMT (Updated: 12 July 2020 8:37 AM GMT)
கிருஷ்ணகிரி நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து அவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர்களை வழங்கி பேசினார். இதில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் வழிக்காட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, மக்கள் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக ரவுண்டானா வழியாக சென்ற அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர்களை வழங்கி பேசினார். இதில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் வழிக்காட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, மக்கள் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக ரவுண்டானா வழியாக சென்ற அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X