search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில்
    தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 85 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 49
    செங்கல்பட்டு - 3,360
    சென்னை - 17,989
    கோவை - 812
    கடலூர் - 437
    தர்மபுரி - 152
    திண்டுக்கல் - 232
    ஈரோடு - 188
    கள்ளக்குறிச்சி - 760
    காஞ்சிபுரம் - 1,879
    கன்னியாகுமரி - 741
    கரூர் - 52
    கிருஷ்ணகிரி - 80 
    மதுரை - 3,843
    நாகை - 177
    நாமக்கல் - 67
    நீலகிரி - 109
    பெரம்பலூர் - 12
    புதுக்கோட்டை - 184
    ராமநாதபுரம் - 1,026
    ராணிப்பேட்டை - 757
    சேலம் - 1,057
    சிவகங்கை - 303
    தென்காசி - 365
    தஞ்சாவூர் - 238
    தேனி - 1,066
    திருப்பத்தூர் - 182
    திருவள்ளூர் - 2,425
    திருவண்ணாமலை - 1,240
    திருவாரூர் - 286
    தூத்துக்குடி - 1,096
    திருநெல்வேலி - 815
    திருப்பூர் - 125
    திருச்சி - 589
    வேலூர் - 1,582
    விழுப்புரம் - 515
    விருதுநகர் - 994
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 300
    உள்நாடு - 230
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 96

    மொத்தம் - 46,410

    Next Story
    ×