search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 82 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 38
    செங்கல்பட்டு - 3,127
    சென்னை - 18,616
    கோவை - 744
    கடலூர் - 463
    தர்மபுரி - 149
    திண்டுக்கல் - 282
    ஈரோடு - 221
    கள்ளக்குறிச்சி - 807
    காஞ்சிபுரம் - 1,797
    கன்னியாகுமரி - 658
    கரூர் - 55
    கிருஷ்ணகிரி - 64 
    மதுரை - 4,131
    நாகை - 173
    நாமக்கல் - 57
    நீலகிரி - 127
    பெரம்பலூர் - 10
    புதுக்கோட்டை - 280
    ராமநாதபுரம் - 985
    ராணிப்பேட்டை - 724
    சேலம் - 956
    சிவகங்கை - 284
    தென்காசி - 298
    தஞ்சாவூர் - 225
    தேனி - 997
    திருப்பத்தூர் - 196
    திருவள்ளூர் - 2,221
    திருவண்ணாமலை - 1,212
    திருவாரூர் - 287
    தூத்துக்குடி - 940
    திருநெல்வேலி - 777
    திருப்பூர் - 130
    திருச்சி - 517
    வேலூர் - 1,498
    விழுப்புரம் - 509
    விருதுநகர் - 943
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 281
    உள்நாடு - 229
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 97

    மொத்தம் - 46,105

    Next Story
    ×