search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விருதுநகரில் 289 பேர், மதுரையில் 262 பேர் - தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,216 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 86 பேர்.

    விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 39 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 19 பேர் ஆவர்.

    மேலும், கடல் மார்க்கமாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 3 பேர். ரெயில் மூலமாக தமிழகம் வந்தவர்கள் 1 நபர். சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 83 பேர் ஆகும்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 78 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளனர்.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை (வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட):-

    அரியலூர் - 5
    செங்கல்பட்டு - 169
    சென்னை - 1,216
    கோவை - 98
    கடலூர் - 67
    தர்மபுரி - 56
    திண்டுக்கல் - 4
    ஈரோடு - 17
    கள்ளக்குறிச்சி - 254
    காஞ்சிபுரம் - 67
    கன்னியாகுமரி - 93
    கரூர் - 4
    கிருஷ்ணகிரி - 4
    மதுரை - 262
    நாகை - 25
    நாமக்கல் - 17
    நீலகிரி - 13
    பெரம்பலூர் - 5
    புதுக்கோட்டை - 46
    ராமநாதபுரம் - 61
    ராணிப்பேட்டை - 79
    சேலம் - 92
    சிவகங்கை - 62
    தென்காசி - 29
    தஞ்சாவூர் - 32
    தேனி - 90
    திருப்பத்தூர் - 19
    திருவள்ளூர் - 364
    திருவண்ணாமலை - 70
    திருவாரூர் - 40
    தூத்துக்குடி - 196
    திருநெல்வேலி - 110
    திருப்பூர் - 6
    திருச்சி - 93
    வேலூர் - 87
    விழுப்புரம் - 31
    விருதுநகர் - 289
    விமானநிலைய தனிமைப்படுத்தல்
    வெளிநாடு - 39
    உள்நாடு - 19
    ரெயில்நிலைய கண்காணிப்பு - 1

    மொத்தம் - 4,231

    Next Story
    ×