என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை- தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தகவல்
Byமாலை மலர்7 July 2020 1:49 PM GMT (Updated: 7 July 2020 1:49 PM GMT)
ராஜபாளையம் தொகுதியிலுள்ள 25 ஊராட்சிகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வேதநாயகபுரம் கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சி வேதநாயகபுரம் கிராமத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் நகரில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க அம்ரூத் திட்டத்தின் கீழ் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜபாளையம் தொகுதியிலுள்ள 25 ஊராட்சிகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் கவுன்சிலர் நவமணி, கிளை செயலாளர் மாணிக்கராஜ், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வேதநாயகபுரம் கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சி வேதநாயகபுரம் கிராமத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் நகரில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க அம்ரூத் திட்டத்தின் கீழ் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜபாளையம் தொகுதியிலுள்ள 25 ஊராட்சிகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் கவுன்சிலர் நவமணி, கிளை செயலாளர் மாணிக்கராஜ், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X