search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 26
    செங்கல்பட்டு - 2,958
    சென்னை - 24,052
    கோவை - 525
    கடலூர் - 378
    தர்மபுரி - 76
    திண்டுக்கல் - 371
    ஈரோடு - 200
    கள்ளக்குறிச்சி - 714
    காஞ்சிபுரம் - 1,661
    கன்னியாகுமரி - 373
    கரூர் - 41
    கிருஷ்ணகிரி - 124 
    மதுரை - 3,199
    நாகை - 182
    நாமக்கல் - 22
    நீலகிரி - 101
    பெரம்பலூர் - 14
    புதுக்கோட்டை - 238
    ராமநாதபுரம் - 981
    ராணிப்பேட்டை - 650
    சேலம் - 870
    சிவகங்கை - 340
    தென்காசி - 211
    தஞ்சாவூர் - 172
    தேனி - 744
    திருப்பத்தூர் - 186
    திருவள்ளூர் - 1,666
    திருவண்ணாமலை - 1,251
    திருவாரூர் - 198
    தூத்துக்குடி - 401
    திருநெல்வேலி - 416
    திருப்பூர் - 91
    திருச்சி - 462
    வேலூர் - 1,287
    விழுப்புரம் - 607
    விருதுநகர் - 528
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 205
    உள்நாடு - 215
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 97

    மொத்தம் - 46,833



    Next Story
    ×