search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.
    X
    நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

    குமாரபாளையம் பகுதியில் தியேட்டர் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

    குமாரபாளையம் பகுதியில் தியேட்டர் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களில் வேலை செய்த பணியாளர்கள் ஊரடங்கையொட்டி வேலை இழந்து அவதியடைந்து வருகின்றனர். இதையொட்டி தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் தியேட்டர் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் குமாரபாளையம் தாசில்தார் தங்கம் 36 தியேட்டர் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ கோதுமை, ஒரு கிலோ சர்க்கரை அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
    Next Story
    ×