என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய பெண் டி.ஐ.ஜி.
Byமாலை மலர்6 July 2020 2:27 AM GMT (Updated: 6 July 2020 2:27 AM GMT)
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சுமார் 20 கி.மீ.தூரம் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருச்சி:
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஆனிவிஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்று கொண்டார். அப்போது அவர், திருச்சி சரகத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என டி.ஐ.ஜி.ஆனிவிஜயா சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம், செம்பட்டு வழியாக மாத்தூர் வரை சென்று சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சுமார் 20 கி.மீ.தூரம் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஆனிவிஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்று கொண்டார். அப்போது அவர், திருச்சி சரகத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என டி.ஐ.ஜி.ஆனிவிஜயா சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம், செம்பட்டு வழியாக மாத்தூர் வரை சென்று சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சுமார் 20 கி.மீ.தூரம் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X