search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 21
    செங்கல்பட்டு - 3,068
    சென்னை - 24,890
    கோவை - 464
    கடலூர் - 365
    தர்மபுரி - 69
    திண்டுக்கல் - 373
    ஈரோடு - 162
    கள்ளக்குறிச்சி - 686
    காஞ்சிபுரம் - 1,531
    கன்னியாகுமரி - 310
    கரூர் - 37
    கிருஷ்ணகிரி - 110 
    மதுரை - 2,975
    நாகை - 171
    நாமக்கல் - 18
    நீலகிரி - 75
    பெரம்பலூர் - 12
    புதுக்கோட்டை - 236
    ராமநாதபுரம் - 941
    ராணிப்பேட்டை - 606
    சேலம் - 842
    சிவகங்கை - 327
    தென்காசி - 240
    தஞ்சாவூர் - 184
    தேனி - 634
    திருப்பத்தூர் - 169
    திருவள்ளூர் - 1,650
    திருவண்ணாமலை - 1,342
    திருவாரூர் - 191
    தூத்துக்குடி - 311
    திருநெல்வேலி - 350
    திருப்பூர் - 79
    திருச்சி - 485
    வேலூர் - 1,347
    விழுப்புரம் - 565
    விருதுநகர் - 502
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 196
    உள்நாடு - 236
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 92

    மொத்தம் - 46,860

    Next Story
    ×