என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Byமாலை மலர்5 July 2020 2:36 PM GMT (Updated: 5 July 2020 2:36 PM GMT)
சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 66,519லிருந்து 68,254 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 66,519லிருந்து 68,254 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X