என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை தடுக்க உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் அவசியம்- கலெக்டர் அறிவுரை
Byமாலை மலர்5 July 2020 7:24 AM GMT (Updated: 5 July 2020 7:24 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்யவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம்:
இப்பணியின் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்த 11 ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்த 2,325 தன்னார்வலர்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்க்க உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல், ஆவி பிடித்தல் போன்று அவரவர் வீடுகளிலேயே கடைபிடிக்கக்கூடிய எளிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகள், பழங்கள், பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக்கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சரவணபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் யூனியன் புல்லங்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சந்தித்து பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கி அறிவுரை கூறினார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நேரம் பாராமல் சிறப்பாக பணியாற்றி வருகின்றன.
இப்பணியின் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்த 11 ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்த 2,325 தன்னார்வலர்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்க்க உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல், ஆவி பிடித்தல் போன்று அவரவர் வீடுகளிலேயே கடைபிடிக்கக்கூடிய எளிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகள், பழங்கள், பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக்கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சரவணபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X