search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் - 60 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
    சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

    மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் பலியாகியுள்ளனர்.

    ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 214 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

    அரியலூர் - 439
    செங்கல்பட்டு - 3,220
    சென்னை - 41,309
    கோவை - 275
    கடலூர் - 856
    தர்மபுரி - 50
    திண்டுக்கல் - 315
    ஈரோடு - 81
    கள்ளக்குறிச்சி - 465
    காஞ்சிபுரம் - 926
    கன்னியாகுமரி - 221
    கரூர் - 124
    கிருஷ்ணகிரி - 67 
    மதுரை - 994
    நாகை - 106
    நாமக்கல் - 90
    நீலகிரி - 44
    பெரம்பலூர் - 156
    புதுக்கோட்டை - 79
    ராமநாதபுரம் - 359
    ராணிப்பேட்டை - 537
    சேலம் - 337
    சிவகங்கை - 161
    தென்காசி - 207
    தஞ்சாவூர் - 310
    தேனி - 268
    திருப்பத்தூர் - 87
    திருவள்ளூர் - 2,895
    திருவண்ணாமலை - 1,107
    திருவாரூர் - 329
    தூத்துக்குடி - 815
    திருநெல்வேலி - 635
    திருப்பூர் - 125
    திருச்சி - 463
    வேலூர் - 537
    விழுப்புரம் - 604
    விருதுநகர் - 346
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 206
    உள்நாடு - 123
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 324

    மொத்தம் - 60,592
    Next Story
    ×