search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதவி கலெக்டர் ஆய்வு
    X
    உதவி கலெக்டர் ஆய்வு

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதவி கலெக்டர் ஆய்வு

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட தோகைமலை ஒன்றியம், கூடலூர், பேரூர், உடையாபட்டி, கள்ளை, குழந்தைப்பட்டி ஆகிய பகுதிகளில் குளித்தலை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
    தோகைமலை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட தோகைமலை ஒன்றியம், கூடலூர், பேரூர், உடையாபட்டி, கள்ளை, குழந்தைப்பட்டி ஆகிய பகுதிகளில் குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதிகளில் வீதியில் தடுப்பு வேலி அமைத்து சீல் வைக்கப்பட்டது. அப்பகுதிகளில் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணிக்க அறிவுறுத்தினார். பின்னர் குளித்தலை-மணப்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு செய்து, மணப்பாறை பகுதிகளில் இருந்து முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×