search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகா பயிற்சி
    X
    யோகா பயிற்சி

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி

    ஆற்காடு அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தாசில்தார் காமாட்சி நேரில் சென்று பார்வையிட்டார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதித்தவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுரையின் பேரில் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை ஆற்காடு தாசில்தார் காமாட்சி நேரில் சென்று பார்வையிட்டார்.
    Next Story
    ×