search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 41 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

    அரியலூர் - 38
    செங்கல்பட்டு - 2,696
    சென்னை - 22,686
    கோவை - 375
    கடலூர் - 344
    தர்மபுரி - 54
    திண்டுக்கல் - 295
    ஈரோடு - 107
    கள்ளக்குறிச்சி - 636
    காஞ்சிபுரம் - 1,238
    கன்னியாகுமரி - 270
    கரூர் - 30
    கிருஷ்ணகிரி - 111 
    மதுரை - 2,203
    நாகை - 160
    நாமக்கல் - 9
    நீலகிரி - 76
    பெரம்பலூர் - 8
    புதுக்கோட்டை - 157
    ராமநாதபுரம் - 790
    ராணிப்பேட்டை - 426
    சேலம் - 743
    சிவகங்கை - 231
    தென்காசி - 182
    தஞ்சாவூர் - 189
    தேனி - 606
    திருப்பத்தூர் - 129
    திருவள்ளூர் - 1,440
    திருவண்ணாமலை - 1,108
    திருவாரூர் - 272
    தூத்துக்குடி - 297
    திருநெல்வேலி - 257
    திருப்பூர் - 77
    திருச்சி - 299
    வேலூர் - 1,137
    விழுப்புரம் - 388
    விருதுநகர் - 358
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 205
    உள்நாடு - 242
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 178

    மொத்தம் - 41,047

    Next Story
    ×