என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கொரோனா
Byமாலை மலர்2 July 2020 1:13 PM GMT (Updated: 2 July 2020 1:13 PM GMT)
மதுரையில் 20 முதல் 50 வயது உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை:
மதுரையில் 20 முதல் 50 வயது உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை கொரோனா எளிதில் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதில்லை. மற்ற வயதினர் தெருக்களில் நடமாடுவது அதிகம். 20 முதல் 50 வயதிற்குள்ளோர் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கற்பனை செய்கின்றனர். கொரோனாவிடம் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இவ்வயதினர் அதிகம் பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஜூன் 29 தேதி வரையிலான பாதிப்பு பட்டியலில் மாநகராட்சியில் 1627 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172, 21 முதல் 50 வயதினர் 1017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேர் உள்ளனர். இளவயதினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் முதியவர்கள், பிறநோய் இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வயது வேறுபாடின்றி தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இளம் வயதினர் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள் என்றும் கூறினார்.
மதுரையில் 20 முதல் 50 வயது உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை கொரோனா எளிதில் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதில்லை. மற்ற வயதினர் தெருக்களில் நடமாடுவது அதிகம். 20 முதல் 50 வயதிற்குள்ளோர் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கற்பனை செய்கின்றனர். கொரோனாவிடம் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இவ்வயதினர் அதிகம் பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஜூன் 29 தேதி வரையிலான பாதிப்பு பட்டியலில் மாநகராட்சியில் 1627 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172, 21 முதல் 50 வயதினர் 1017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேர் உள்ளனர். இளவயதினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் முதியவர்கள், பிறநோய் இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வயது வேறுபாடின்றி தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இளம் வயதினர் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள் என்றும் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X