search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலம் மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளது.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 52,926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 946 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 288 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×