என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது
Byமாலை மலர்2 July 2020 1:59 AM GMT (Updated: 2 July 2020 2:49 AM GMT)
சாத்தான்குளம் வழக்கில் தற்போது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் தலைமறைவிட்டதாக வெளியான தகவலுக்கு மத்தியில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையத்தில் பணி புரிந்த காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் உள்ளடக்கம் எனவும், அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X