search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிசிஐடி ஐஜி சங்கர்
    X
    சிபிசிஐடி ஐஜி சங்கர்

    ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை

    சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தினார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தததால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    அதேசமயம் தடயவியல் நிபுணர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

    இது ஒரு புறமிருக்க அதன்பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் காவல் ஆய்வாளர் உலக ராணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் பிறைசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    இது ஒரு புறமிருக்க திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் விசாரணை நடத்தினார்.

    அப்போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தி அமைக்கப்பட உள்ளது என்றும்  10 முதல் 12 குழுக்கள் நியமிக்கப்பட்டு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×