என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்21 Jun 2020 9:31 AM GMT (Updated: 21 Jun 2020 9:31 AM GMT)
மதுரையில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜன்(வயது 52 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் காலையில் கடைக்கு செல்லும் சண்முகராஜன், சாப்பிட மட்டும் வீட்டுக்கு வருவார். அதன்பின்னர் அவரது மனைவியும் அவருக்கு உதவியாக கடைக்கு சென்று விடுவார்.
இரவு வியாபாரத்தை முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது. மேலும் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்ள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் இது குறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் அவரது உறவினர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜன்(வயது 52 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் காலையில் கடைக்கு செல்லும் சண்முகராஜன், சாப்பிட மட்டும் வீட்டுக்கு வருவார். அதன்பின்னர் அவரது மனைவியும் அவருக்கு உதவியாக கடைக்கு சென்று விடுவார்.
இரவு வியாபாரத்தை முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது. மேலும் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்ள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் இது குறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் அவரது உறவினர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X