என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையம் அருகே அரிசி ஆலைக்குள் புகுந்து தொழிலாளி வெட்டி படுகொலை
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்லம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது47). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் பணிக்கு சென்று விட்டார்.
கண்ணன் வேலை பார்த்த அரிசி ஆலையின் பின்புறம் கண்மாய் உள்ளது. அரிசி ஆலைக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் கண்மாய் கரை வழியாக ஆலைக்குள் பலர் வருவதுண்டு.
நேற்று நள்ளிரவு அந்த வழியாக ஒரு கும்பல் ஆலைக்குள் புகுந்தது. அவர்களை பார்த்ததும் கண்ணன் அங்கிருந்து ஓடினார்.
அந்த கும்பல் அவரை ஆயுதங்களுடன் விரட்டியது. சிறிது தூரத்தில் கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடலில் 16 இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
அவர் இறந்ததை உறுதி செய்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. நள்ளிரவில் ஆலைக்குள் புகுந்து தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் இளம்திரைகொண்டான் கிராமத்தில் உள்ள வாறுகால் வரை சென்று படுத்துக் கொண்டது.
இதனால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம்? என்ற விவரம் தெரியவில்லை. கொலை நடந்த அரிசி ஆலையில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு சி.சி.டி.வி. கேமிரா இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த கேமிராவில் பதிவு எதுவும் இல்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, முதல் நாளே கண்காணிப்பு கேமிரா அணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமிரா தானாக பழுதானதா? அல்லது கொலை பற்றி தெரிந்து அணைத்து வைக்கப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்