search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    கன்னியாகுமரியில் 2 துணை மின்நிலையங்கள்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    கன்னியாகுமரியில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட 2 துணை மின்நிலையங்களை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    கன்னியாகுமரி:

    ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் ரூ.5 கோடியே ஒரு லட்சத்து 33 ஆயிரம் செலவில் 33/11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல கொட்டாரம் பகுதியில் ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் 110/33 கிலோ வாட் திறன் கொண்ட இன்னொரு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த 2 துணை மின் நிலையங்கள் மூலம் கன்னியாகுமரி, கொட்டாரம் மற்றும் பஞ்சலிங்கப்புரம் பகுதிகளை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் வீட்டு இணைப்புகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறும்.

    இந்த 2 துணை மின் நிலையங்களையும் இன்றுகாலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அப்போது , தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இங்கு குத்துவிளக்கேற்றி, கூடியிருந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், எம்.எல்.ஏ. ஆஸ்டின், பால்வளத்துறை தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.ஏ. அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள்,.

    குமரி மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைதலைவர் தம்பிதங்கம், பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன், கன்னியாகுமரி பேரூர் செயலாளர் வின்ஸ்டன், ராஜபாண்டியன், சீனிவாசன், மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி நகர செயலாளர் குமரி ஸ்டீபன், மாநில காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் வக்கீல் சீனிவாசன்.

    பயிற்சி கலெக்டர் ரிசப், மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் தேன்மொழி, உதவி செயற்பொறியாளர் ஆன்றனி பிரின்ஸ், இளைநிலை பொறியாளர் வினுகுமார், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×