search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    குழந்தைக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

    குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அ.தி.மு.க. பொருளாளராக இருந்தவர் கணேசன் (வயது 61). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 2½ வயது குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்.

    இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது குறித்த தகவல் தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோம்பை அ.தி.மு.க. பொருளாளராக இருந்த கணேசன் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×