என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரிகளில் ஏற்றிவந்த 1,000 போலி சிமெண்டு மூட்டைகள் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்25 May 2020 1:34 PM GMT (Updated: 25 May 2020 1:34 PM GMT)
வாணியம்பாடி அருகே 1000 போலி சிமெண்டு மூட்டைகள், அதை ஏற்றி வந்த 2 லாரிகள், அவற்றில் வைத்திருந்த போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புலவர்பள்ளி பகுதியில் ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 லாரிகள் வேகமாக வந்தன. லாரிகளை தடுத்து நிறுத்தி டிரைவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அந்த லாரிகள் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் இருந்து வருவதாகக் கூறினர். லாரிகளில் சோதனை செய்தபோது, பல்வேறு மாநில பதிவெண்களை கொண்ட நம்பர் பிளேட்டுகள் இருந்ததும், போலி சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வரப்பட்டதும் தெரிய வந்தது.
அவை ஆலங்காயத்தில் உள்ள பிரபல கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்ததாகக் கூறினர். இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களான திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு பகுதியைச் சேர்ந்த வைரபெருமாள் (வயது 31), காரைக்குடியைச் சேர்ந்த ராகுல் என்கிற பிரமோத் (25) எனத் தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து லாரிகளுடன் 1000 போலி சிமெண்டு மூட்டைகள், அவைகளில் வைக்கப்பட்டு இருந்த போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலி சிமெண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் குறித்தும், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் எந்தெந்தக் கடைகளுக்கு போலி சிமெண்டு மூட்டைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X