என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பில் சிக்கல்
Byமாலை மலர்19 May 2020 7:51 AM GMT (Updated: 19 May 2020 7:51 AM GMT)
மழை கண்ணாமூச்சி காட்டி வருவதால் முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த சில நாட்கள் மழை பெய்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது 113.15 அடி நீர் மட்டம் உள்ளது. 28 கன அடி நீர் வருகிற நிலையில் 125 கன அடி நீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டினால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
எனவே இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே ஜூன் மாதத்தில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்க முடியும். எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
வைகை அணையின் நீர் மட்டம் 42.51 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.65 அடி. நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த சில நாட்கள் மழை பெய்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது 113.15 அடி நீர் மட்டம் உள்ளது. 28 கன அடி நீர் வருகிற நிலையில் 125 கன அடி நீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டினால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
எனவே இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே ஜூன் மாதத்தில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்க முடியும். எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
வைகை அணையின் நீர் மட்டம் 42.51 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.65 அடி. நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X