என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக திறக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
Byமாலை மலர்14 May 2020 10:40 AM GMT (Updated: 14 May 2020 10:40 AM GMT)
மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்:
காவிரி டெல்டா பகுதிகளில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக வெப்ப சலன மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் ஆங்காங்கே மண் உழவு செய்தல் விதை விடுதல் நாற்று பறித்தல் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட எண்கண், காப்பகம், காப்பன், அமங்கலம், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆறு, குளங்களை தூர்வாரியதாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்த நிலையில் முறையான நீர் மேலாண்மை செய்யப்பட்டதாலும் சாகுபடிப்பரப்பு அதிகரித்து நெல் உற்பத்தி அதிகரித்தது.
இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. மேலும் டெல்டா பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருவதாலும் சாகுபடி பணிகளை தொடங்கு வதற்கு ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டும் விவசாயத்தை மேம்படுத்துகின்ற வகையில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேட்டூர் அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு வழக்கம்போல் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
மேலும் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொள்ளும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக வெப்ப சலன மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் ஆங்காங்கே மண் உழவு செய்தல் விதை விடுதல் நாற்று பறித்தல் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட எண்கண், காப்பகம், காப்பன், அமங்கலம், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆறு, குளங்களை தூர்வாரியதாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்த நிலையில் முறையான நீர் மேலாண்மை செய்யப்பட்டதாலும் சாகுபடிப்பரப்பு அதிகரித்து நெல் உற்பத்தி அதிகரித்தது.
இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. மேலும் டெல்டா பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருவதாலும் சாகுபடி பணிகளை தொடங்கு வதற்கு ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டும் விவசாயத்தை மேம்படுத்துகின்ற வகையில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேட்டூர் அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு வழக்கம்போல் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
மேலும் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொள்ளும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X