என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி தன்னுயிரை துறந்த நாய்
Byமாலை மலர்11 May 2020 4:52 AM GMT (Updated: 11 May 2020 4:52 AM GMT)
தஞ்சை மாவட்டம் பூதலூரில் எஜமாரின் குடும்பத்தை காப்பாற்ற 2 பாம்புகளுடன் சண்டையிட்ட நாய் சுருண்டு விழுந்து இறந்தது.
தஞ்சை:
தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயிலடி பழைய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி(வயது 64). இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை அவரது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு கண்விழித்த கோவிந்தசாமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் ஒரு நல்ல பாம்பு மற்றும் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு என கொடிய விஷம் உடைய 2 பாம்புகளுடன் நாய், கடுமையாக சண்டை போட்டு கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நீண்ட நேரம் பாம்புகளுடன் போராடிய நாய், அவைகளை கடித்து குதறி கொன்றது. நாய் கடித்ததில் இரண்டு பாம்புகளும் துண்டு, துண்டானது. பாம்புகள் கடித்ததில் விஷம் ஏறியதால் சிறிது நேரத்தில் நாயும் சுருண்டு விழுந்து இறந்தது. இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், “எங்களுக்காக பாம்புகளுடன் போராடி தனது உயிரை விட்ட நாயை எங்கள் வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்து விட்டோம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயிலடி பழைய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி(வயது 64). இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை அவரது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு கண்விழித்த கோவிந்தசாமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் ஒரு நல்ல பாம்பு மற்றும் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு என கொடிய விஷம் உடைய 2 பாம்புகளுடன் நாய், கடுமையாக சண்டை போட்டு கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நீண்ட நேரம் பாம்புகளுடன் போராடிய நாய், அவைகளை கடித்து குதறி கொன்றது. நாய் கடித்ததில் இரண்டு பாம்புகளும் துண்டு, துண்டானது. பாம்புகள் கடித்ததில் விஷம் ஏறியதால் சிறிது நேரத்தில் நாயும் சுருண்டு விழுந்து இறந்தது. இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், “எங்களுக்காக பாம்புகளுடன் போராடி தனது உயிரை விட்ட நாயை எங்கள் வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்து விட்டோம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X