என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்ததும் உடல் நீலநிறமாக மாறியதால் தீவிர சிகிச்சை - குணமடைந்த குழந்தை தாயிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்30 April 2020 4:51 AM GMT (Updated: 30 April 2020 4:51 AM GMT)
பிறந்ததும் உடல் நீலநிறமாக மாறிய நாகர்கோவில் குழந்தைக்கு கேரள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. பின்னர் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் பைசல். இவருடைய மனைவி சோபியா நசீம் பானு. இந்த தம்பதிக்கு கடந்த 14-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. உடல் நீலநிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஊரடங்கால் அதில் பல சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கையால் குழந்தை சுமார் 280 கி.மீ பயணத்துக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினர். டாக்டர்களின் தீவிர முயற்சியால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி முழுமையாக குணமடைந்தது.
இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் சோபியா நசீம் பானு, பிறந்த உடன் பார்த்த குழந்தையை, மறுநாளே சிகிச்சைக்காக கொண்டு சென்றதால் பரிதவித்தார். இந்த நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்பதை எண்ணியதும், பூரிப்படைந்தார். பிறகு, குழந்தையை பெற்றுகொள்வதற்காக குமரி மாவட்ட எல்லைக்கு தாய் சோபியா நசீம் பானு மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் நாகர்கோவில் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் குழந்தையின் தாய் தயார் நிலையில் இருந்தார். அப்போது கேரள ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள், குழந்தையை சோபியா நசீம் பானுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடினார். ஆனந்த கண்ணீருடன் குழந்தையை பெற்ற அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஊரடங்கு சமயத்தில், பல இடைஞ்சலுக்கு இடையே குழந்தையை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு உதவிய முதல்-மந்திரி பினராயி விஜயன், குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் இருமாநில போலீசார், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
இருமாநில எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் பைசல். இவருடைய மனைவி சோபியா நசீம் பானு. இந்த தம்பதிக்கு கடந்த 14-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. உடல் நீலநிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஊரடங்கால் அதில் பல சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கையால் குழந்தை சுமார் 280 கி.மீ பயணத்துக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினர். டாக்டர்களின் தீவிர முயற்சியால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி முழுமையாக குணமடைந்தது.
இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் சோபியா நசீம் பானு, பிறந்த உடன் பார்த்த குழந்தையை, மறுநாளே சிகிச்சைக்காக கொண்டு சென்றதால் பரிதவித்தார். இந்த நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்பதை எண்ணியதும், பூரிப்படைந்தார். பிறகு, குழந்தையை பெற்றுகொள்வதற்காக குமரி மாவட்ட எல்லைக்கு தாய் சோபியா நசீம் பானு மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் நாகர்கோவில் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் குழந்தையின் தாய் தயார் நிலையில் இருந்தார். அப்போது கேரள ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள், குழந்தையை சோபியா நசீம் பானுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடினார். ஆனந்த கண்ணீருடன் குழந்தையை பெற்ற அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஊரடங்கு சமயத்தில், பல இடைஞ்சலுக்கு இடையே குழந்தையை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு உதவிய முதல்-மந்திரி பினராயி விஜயன், குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் இருமாநில போலீசார், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
இருமாநில எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X