search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    ஆலங்குளம் அருகே மின் வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின் வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தது தொடர்பாக தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வ கணபதி(வயது22), விஜயன்(22). இருவரும் நேற்றுஇரவு தங்களது நண்பர்கள் சிலருடன் அருணாசலப்பேரி என்ற கிராமத்தின் அருகே இருக்கும் மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வேட்டையாட சென்றனர்.

    அருணாசலப்பேரியை சேர்ந்த கிருஷ்ணபாண்டி என்ற விவசாயி தனது தோட்டத்தில் நாட்டுசோளம் பயிரிட்டுள்ளார். அதனை வனவிலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அதுதெரியாமல் அவரது தோட்டம் இருந்த பகுதிக்கு வேட்டையாட வந்த வாலிபர்கள் சென்றுள்ளனர்.

    அப்போது செல்வகணபதி மின்வேலியை தொட்டுவிட்டார். அவரை மின்சாரம் தாக்கியது. விஜயன் அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணபாண்டி அனுமதியின்றி தனது தோட்டத்தில் மின்வேலியை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×