search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா சந்தேகம்: கோவை தனியார் ஆஸ்பத்திரிகளில் 11 பேர் அனுமதி

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் நேற்று 11 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
    கோவை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதை மீறி வெளியே செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. அதில் பலர் குணமடைந்து வீட்டிற்கு சென்று உள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும், கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா சந்தேகத்துடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 156 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 75 பேர் என்று மொத்தம் 231 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா சந்தேகத்துடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 ஆண்கள், 4 பெண்கள், ஒரு ஆண் குழந்தை அடங்கும். அவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் நேற்று அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சளி, ரத்த பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கொரோனா பாதிப்பு யாருக்கு உள்ளது என்பது தெரிய வரும். அவர்கள் மட்டும் உடனடியாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர். 
    Next Story
    ×